

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கிளார்க்கிற்குப் பிறகு ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது.
தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 2-வது போட்டி கொல்கத்தாவில் 21-ந்தேதி நடக்கிறது. இந்நிலையில் ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘ஸ்மித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. ஆனால், அவருடைய கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது. அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லுவது தேவையானது.