காம்பிரை பற்றி நினைத்தாலே எமோசன் ஆகிவிடுவேன் - நவ்தீப் சைனி

காம்பிரை பற்றி நினைத்தாலே எமோசன் ஆகிவிடுவேன் என்று மொகமது ஷமிக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள சைனி கூறியுள்ளார்.
காம்பிரை பற்றி நினைத்தாலே எமோசன் ஆகிவிடுவேன் - நவ்தீப் சைனி
Published on

டெல்லி அணிக்காக விளையாடி வரும் சைனி, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு கம்பீர்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். 2013-ம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியின் வலைப் பயிற்சியின்போது பந்து வீசிய நேரத்தில், சைனியின் திறமையை பார்த்து காம்பீர் அவருக்கு பெரிய அளவில் உதவி  செய்துள்ளார்.

காம்பீர் குறித்து சைனில் சைனி கூறுகையில் ‘‘கவுதம் காம்பிர் என்னிடம், டென்னிஸ் பந்தில் எப்படி பந்து வீசுவாயோ, அதேபோல் பந்து வீசவும். அப்படி வீசினால் சரியான இடத்தில் பந்து விழும் என்றார். அவர் சொன்னதுபோல் நான் செய்தேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு அவர்தான் காரணம். எப்போதெல்லாம் கவுதம் காம்பிர் பற்றி நினைத்தாலும் நான் எமோசன் ஆகிவிடுவேன். அது ஏன் என்று தெரியவில்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com