

2015-ல் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு, டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனால் ஆஸ்திரேலியா தொடரின் மத்தியில் விராட் கோலி கேப்டனாக பதவி ஏற்றார்.
அதன்பின் இலங்கை அணிக்கெதிராக முழுத்தொடரில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த தொடரை இந்தியா 2-1 எனக்கைப்பற்றியது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காள தேசம், ஆஸ்திரேலியா, தற்போது இலங்கை என தொடர்ந்து 8 தொடர்களை இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 8 தொடர்களை வென்ற 2-வது அணி என்ற பெருமையை இங்கிலாந்துடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கிலாந்து 1884-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 1892-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து 8 தொடர்களை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.