

இவர் ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் வெற்றி பெறக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பெல்லா கூறுகையில் ‘‘நான் கால்பந்து போட்டியை விரும்பி பார்ப்பேன். ஆனால் அர்ஜென்டினா தோல்வியடைந்ததும், போட்டிகளை பார்க்கவில்லை. ஏனென்றால் சொந்த அணி வெளியேறியது கவலையளிக்கிறது.
பிரேசில் மேலும் உலகக்கோப்பையை வெல்லவே கூடாது. அப்படி நடந்தால் நான் மிகவும் கவலையடைவேன். நான் அதை விரும்பமாட்டேன். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஐந்து முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளனர். நாங்கள் இரண்டு முறைதான் கைப்பற்றியுள்ளோம். இன்னும் ஒருமுறை என்பது சாத்தியமற்றது’’ என்றார்.