

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த ஒத்திகை நடந்தது. உன்னாயோ மாவட்டத்தில் பங்கார்மாயூ என்ற இடத்தின் அருகே நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 16 விமானங்கள் தரை இறக்கப்பட்டன.
அவற்றில் 16 போர் விமானங்கள் அடங்கும். மேலும் சி-130 ரக, சரக்கு விமானமும் தரை இறக்கப்பட்டது. இந்த விமானம் 35 ஆயிரம் கிலோ எடை கொண்டது. முதன் முறையாக இந்த விமானம் நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரம் நடந்தது. முன்னதாக போர் விமானங்கள் லாவகமாக பறந்து வந்து தரை இறங்கின. அவற்றை சாலையோரம் கூடிநின்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தரை இறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.