கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர் அலி பருக். துணி வியாபாரி. இவரது மனைவி ஷாகிரா பானு. இவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவர் உமர் அலி பருக் மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை கடந்த 4-ந் தேதி இரவு அசிங்கமாக பேசி கையால் எனது வாயின் மீது குத்தினார். இதனால் எனது வாயில் இருந்து 5 பற்களும் உடைந்து விட்டன. வலி தாங்க முடியாமல் துடிதுடித்தேன்.

சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டி சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்து அவர் கொடுமைப் படுத்தினார்.

அவரது பிடியில் இருந்து தப்பிய நான், சென்னை ராயபுரத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை காயப்படுத்தி மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமர் அலி பருக்கை கைது செய்தார். காயம் அடைந்த ஷாகிரா பானு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com