கும்மிடிப்பூண்டி அருகே வேனில் கடத்திய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் வேனில் கடத்திய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அருகே வேனில் கடத்திய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே புதுவாயலில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து வந்த மினி லோடு வேனை வழிமறித்து அவர்கள் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் பாக்கு பொருட்கள் 43 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பெரியபாளையம் அடுத்த ஆரணிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

பிடிபட்ட மினி லோடு வேனுடன் கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் கேசவன் (வயது45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com