

இம்பால்:
மணிப்பூர் மாநில சட்டசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டசபை வளாகத்தில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.