எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல: கவர்னர் கிரண்பேடி பதிலடி

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல, புதுவை வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன், என்னுடைய கடமை அது என்று கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல: கவர்னர் கிரண்பேடி பதிலடி
Published on

புதுச்சேரி:

தூய்மை பணிக்கு எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கவர்னர் மாளிகையில் நிருபர்கள் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து கருத்து கேட்டனர். அதற்கு கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு புதிதல்ல, புதுவை வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன், என்னுடைய கடமை அது. யூனியன் பிரதேசமான புதுவைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க் களை நியமிப்பது தொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அறிவிப்பு நேரம் வரும்போது தெரிய வரும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com