

தருமபுரி:
தருமபுரி அன்னசாகரம் பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 42). பூ வியாபாரியான இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளன.
நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.