சென்னை எழிலகத்தில் தீவிபத்து

சென்னை எழிலகத்தில் உள்ள நான்காவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து (கோப்புப்படம்)
தீவிபத்து (கோப்புப்படம்)
Published on

சென்னை:

சென்னை எழிலகத்தில் உள்ள நான்காவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் பதற்றமடைந்து  வெளியேறினர். தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததும் மூன்று வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

சென்னை எழிலகத்தில் நான்காவது மாடியில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். பெரிதாக ஆவணங்கள், பொருட்கள் சேதமடையவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com