

இந்த போட்டியில் வெற்றி பெற்று ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் காலிறுதி, அரையிறுதி மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து 8 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.
இங்கிலாந்து ரசிகர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காக கடைசி 10 நிமிடத்தில் ஹாரி கேனை களம் இறக்கியிருக்க வேண்டும் என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான காரேத் சவுத்கேட், ஹாரி கேனை களம் இறக்காதது சரியான முடிவே என்று கூறியுள்ளார். இதுகுறித்து காரேத் சவுத்கேட் கூறுகையில் ‘‘10 நிமிடத்திற்காக ஹாரி கேனை நாங்கள் களம் இறக்கியிருந்தால், யாராவது ஒருவர் அவரது முழங்காலை தாக்குவதற்கான சம்பவம் நடைபெற்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் அது அபத்தமானதாக இருந்திருக்கும். நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.