

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாவது சுற்றில் பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7-15 என்ற கணக்ககில் தோல்வியடைந்தார்.