கடன் தொல்லையால் பெண் மாயம்- போலீசார் விசாரணை

காரைக்குடியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் மாயமானார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார்.
மாயம்
மாயம்
Published on

காரைக்குடி:

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ரெயில்வே சாலையில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்க்கொடி(வயது 37). இவர் தனக்கு தெரிந்தவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தனது கணவரிடமும், அவரது தாயாரிடமும் நான் வெளியூர் சென்று சம்பாதித்து வந்து கடனை அடைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன்பின் அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 

இதுகுறித்து அவரது கணவர் நாகராஜன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடன் தொல்லையால் மாயமானவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com