திருச்சியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருச்சி:

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி தினக்கூலியாக ரூ.380 வழங்கிட வேண்டும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அமைச்சர் உத்தரவினை நிறைவேற்ற வேண்டும், பணியின் போது ஏற்படும் விபத்து செலவினை வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நாகை ராஜராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com