குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற ரஷிய பயணி

குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற ரஷிய பயணி அலெக்சாண்டர் சமோக்வலவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற ரஷிய பயணி
Published on

புதுடெல்லி:

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு ஒரு விமானம் பறந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் வந்த ரஷிய பயணி அலெக்சாண்டர் சமோக்வலவ் அதிக குடிபோதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதனால் விமான சிப்பந்திகளும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமரச்செய்தனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். அந்த விமானம் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய போது அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், ரஷிய பயணியை பிடித்து சென்றனர். பின்னர் அவர் டெல்லி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். இதையடுத்து விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகவும், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டதாக ரஷிய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com