திருமருகலில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்

திருமருகல் பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருமருகலில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமருகலில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

திட்டச்சேரி:

திருமருகல் பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திராவிடர் கழக நாகை மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் ராசமுருகையன், மாநில மாணவரணி துணை செயலாளர் பொன்முடி, மண்டல இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோவையில் பெரியாரின் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலைமறியலால் நாகூர்-நன்னிலம் சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com