தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. #FisherMen #TNFisherMen
தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Published on

ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 28-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

மறுநாள் அதிகாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 2 விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜுட்சன் முன்பு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 17 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com