கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு பகுதியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Published on

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் பெனரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் 

எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

இதில் தர்மர், ஜெயக்குமார், கூடலிங்கம், மகாலிங்கம், பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com