search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    60 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்.

    60 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

    • கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
    • இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.35 அடியாக உள்ளது. 1366 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 754 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1322 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 126.28 அடிஉயரம் கொண்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் 125.39 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×