search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் அவமதிப்பால் பரபரப்பு
    X

    எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் அவமதிப்பால் பரபரப்பு

    • எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் அவமதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது
    • கொட்டப்பட்டு பகுதியில் நடந்தது

    திருச்சி:

    எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் கிழிக்கப்பட்டு, படத்திற்கு சாணி அடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

    அ.தி.மு.க.வில் பதவிச்சண்டை அதிகரித்து ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை எழுந்தநிலையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி கைஓங்கியதுடன் சென்னையில் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அ.தி.மு.க. பொ துக்குழுகூட்டத்துடனேயே ஒருங்கிணைப்பாளர் - இணைஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது.

    மேலும் கடந்த 11-ந் தேதி நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஆதரவுடன் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்குள் ஓபிஎஸ் பூட்டை உடைத்து நுழைந்தநிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமும் நிகழ்ந்ததுடன், தலைமைக்கழகம் வருவாய்துறையினரால் சீல்வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையே ஒற்றைதலைமைகுறித்து இரு தரப்பினரும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கும்வேளையில் திருச்சியில் கொட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டதற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் எடப்பாடி பழனிச்சாமி படம் கிழிக்கப்பட்டும், சாணி அடிக்கப்பட்டு காணப்பட்டது. இது திருச்சியில் அரசியல கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×