search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி
    X

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு 'மீம்ஸ்' போட்டி

    • வெற்றி பெரும் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்குகிறார்
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம்-2022 என்ற தலைப்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு 'மீம்ஸ்' போட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் நடைபெற உள்ளது.

    தீபத்தின் போது பொதுமக்கள் குற்ற முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளான குற்ற விழிப்பு ணர்வு, நகை பறிப்பு, பிக்பாக்கெட், குழந்தை கடத்தல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சி னைகள், மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர் தொடர்பான 'மீம்ஸ்'கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயார் செய்து தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை இணைத்து smctvmpolice@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    சிறந்த 'மீம்ஸ்'களாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 பேருக்கு கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரால் நினைவு பரிசு மற்றும் வெகுமதி வழங்கப்படும்.

    மேலும் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் 'மீம்ஸ்'கள் மகா தீப திருவிழாவின் போது பொதுமக்களிடையே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களுடைய 'மீம்ஸ்'களை வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×