மணல் கடத்தலை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்

பொக்லைன் எந்திரம் பறிமுதல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மணல் கடத்தல் நடந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
மணல் கடத்தல் நடந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

ஆலங்காயம்:

வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின்பே ரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப் பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டு அதிலிருந்து மணல் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.

அப்போது டிரைவர் பிரகாசம் மற்றும்துறையேரி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு, அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்கிறாய் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி போக விடாமல் தடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோருடன் இணைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

மேலும் அன்பரசு, சிவக்குமார் மற்றும் டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தா னம் கிராம நிர்வாக அலுவலர் மீரா வாணி யம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com