search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம் குடித்து சாவு
    X

    வாலிபர் விஷம் குடித்து சாவு

    • பட்டதாரியான இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் எருமைக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வேலுமணி.

    பட்டதாரியான இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசசைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலுமணி தற்கொலை குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×