143-வது பாஸ்கு விழா

திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் 143-வது பாஸ்கு விழா நடந்தது.
பாஸ்கு விழா நடந்தது
பாஸ்கு விழா நடந்தது
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் 143-வது ஆண்டு பாஸ்கு விழா  2 நாட்கள் நடைபெற்றது.     இடைகாட்டூர் உலக  புகழ் பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை  சித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்.

 இந்த ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவா லயத்தின் முன்புள்ள அலங் கரிக்ப்பட்ட அரங்கில் “இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு” நாடகமாக நடித்து  காட்டப்பட்டது.

முதன் முறையாக டிஜிட்டல் முறையில் திரை அமைக்கப்பட்டு   இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு தொழு நோயா ளிகளை குணமடைய செய் தல்  உள்ளிட்ட பல காட்சிகள் தத்ரூபமாக நடித்து  காட்டப் பட்டன. 

2-ம் நாள் பார்வை இல்லாவதருக்கு பார்வை வழங்குதல், இறந்த சீடரை உயிர் பித்தல், தொழு நோயா ளிகளை குணமடைய செய் தல், யூத அரசு ஏசுவை கொடுமை செய்து தலையில் முள்கிரிடம் அணிவித்து சிலுவையில் அறையும் காட்சிகளையும்,   சிலுவையில் இருந்து உயிர்தெழும் காட்சி களையும் நடித்து காட்டினர். இந்த நாடகத்தில்  100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து நடித்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் செய்திருந் தது. முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜைகளை  திருத்தல அருட்பணியாளர் இமானுவேல் தாசன் செய்தார்.

 மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com