போதை ஒழிப்பை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி

அரக்கோணம் அரசு பள்ளியில் நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்ற காட்சி.
நிகழ்ச்சியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்ற காட்சி.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பத்திரிக்கையாளரும் மாஸ் மீடியா இயக்குனர் டி.பி.மோசஸ் முன்னிலையில் போதை ஒழிப்பு பற்றி பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போதை வேண்டாம் சிறப்பு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளரும் மாஸ் மீடியா இயக்குனர் டி.பி.மோசஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு போதை வேண்டாம் என தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு வழங்கினார்.

அன்பு பாலம் மூலமாக சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவ மாணவிகள் இன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது பேசுகையில் மாணவ மாணவிகள் போதைப் பழக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்களுக்கு வேண்டிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர் அல்லது தங்கள் ஆசிரியரிடம் உடனடியாக தெரிவித்து அவர்களுக்கு அந்த உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்பது மாணவர்களின் ஒவ்வொரு கடமை என்றும்

போதைப் பொருளிலிருந்து நாம் விடுபட்டால் தான் நாம் அடுத்த தலைமுறையை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அதற்கு மாணவ மாணவிகள் நீங்கள் தான் உறுதி மொழி ஏற்று அதன்படி உங்கள் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

விழிப்புணர்வில் அரக்கோணம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com