அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

3 அடிக்குமேல் விரிவுப்படுத்தி உள்ளனர் பொதுமக்கள் அவதிக்குள்ளானதால் நடவடிக்கை
அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அரக்கோணம் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு அரசு மற் றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் நாள் தோறும் பல்வேறு காரணங்களுக்காக அரக்கோணம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

இதனால், பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டமும் அதிகமாக இருக்கும். பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடை வியாபாரிகள், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை 3 அடிக்குமேல் ஆக்கிரமித்து கடையை விரிவுப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நகராட்சி பொறி யாளர் ஆசிர்வாதம், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் ஊழியர்கள் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com