search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • முதுகுளத்தூரில் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலகுறிச்சி ஊராட்சியில் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா முன்னிலையில் காந்தி ெஜயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கலகுறிச்சி ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட உதவி எண்ணை கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட்டு ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பானுமதி முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேதுராமன், கிராம உதவியாளர் செண்பகவள்ளி மற்றும் வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×