சென்னையில் ரவுடிகளை பிடிக்க அதிரடி வேட்டை- குற்ற செயலை தடுக்க போலீஸ் நடவடிக்கை

இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ரவுடிகளை பிடிக்க அதிரடி வேட்டை- குற்ற செயலை தடுக்க போலீஸ் நடவடிக்கை
Published on

சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் சென்னையில் நடை பெறாமல் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் நகரம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இது தவிர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

பெரியமேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். தங்குபவர்களின் பெயர் விவரங்கள், ஆதார்எண் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் ரவுடிகள் செயல்பாட்டை கண்காணித்து பிடிக்கவும் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். பழைய மற்றும் புதிய குற்றவாளிகள், கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிரடி வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரையில் போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com