என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து கடைக்காரர் பலி
- மின்சாரம் பாய்ந்து கடைக்காரர் பலியானார்.
- வயரை வாயால் கடித்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெண்ணகோனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தனது வீட்டிற்கு வெளியே சூப் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் வீட்டிலிருந்து வெளியே உள்ள கடைக்கு பல்ப் போடுவதற்காக வயரிங் வேலை செய்யும் போது வயரை வாயால் கடித்துள்ளார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாத காரணத்தினால் சுப்பிரமணியன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






