கடலூர் பகுதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

கடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on

கடலூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள வேத விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் வேத விநாயகர் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில், நெல்லிக்குப்பம் கடைத்தெரு வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், மகா தீபார தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com