என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணியில் சேர்ந்த 3 மாதத்தில் பரிதாபம்: என்.எல்.சி. தொழிலாளி சாலை விபத்தில் பலி
- 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார்.
- ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் பஞ்சாப் சாலையில் வசித்தவர் அரவிந்த். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது அனல் மின் நிலைய மனித வளத்துறை பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் என்.எல். சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக சேர்ந்துள்ளார். நேற்று இரவு 10-வது வட்டம் மெயின் ரோட்டில் இருந்து மெயின் பஜாருக்கு தனது மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது தானாகவே ரோட்டில் கீழே விழுந்த அரவிந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரவிந்தை என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக கூறினர். இறந்து போன அரவிந்துக்கு மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்