search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் 70 அடிக்கும் கீழ் குறைந்த வைகை அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்

    பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் 70 அடிக்கும் கீழ் குறைந்த வைகை அணை நீர்மட்டம்

    • தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடிவரை உயர்ந்தது.
    • கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் மேல் இருந்த நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்படும் கூடுதல் தண்ணீர் திறப்பால் 69.87 அடியாக குறைந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 71 அடியில் நிலைநிறுத்தப்பட்ட வைகை அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை நீர்திறப்பு 1669 கனஅடியாக உள்ளது. அணைக்கு 779 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் மேல் இருந்த நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்படும் கூடுதல் தண்ணீர் திறப்பால் 69.87 அடியாக குறைந்துள்ளது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 135.55 அடியாக உள்ளது. 673 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 92 கனஅடிநீர் உபரியாகவும், 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 32 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×