கிருஷ்ணகிரியில் நகைபறித்த 2 பெண்கள் கைது

கிருஷ்ணகிரியில் நகை பறித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
.
.
Published on

கிருஷ்ணகிரி:

தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா கடம்பரஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ராதா(வயது 56). இவர் கிருஷ்ணகிரிக்கு வந்திருந்தார். அங்கு ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தனது ஊருக்கு செல்ல நின்றிருந்தார். 

அப்போது ராதா கையில் வைத்திருந்த பையில் 3 பவுன் தங்க சங்கிலி வைத்திருந்தார். அப்போது அருகில் வந்த 2 பெண்கள் ராதா வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

இதை கவனித்த ராதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஊத்தங்கரை தாலுகா குட்டனூரை சேர்ந்த வடிவேல் மனைவி மங்கா(45), திருப்பத்தூர் சகாதேவன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ரேணு மனைவி சசிகலா(36) என தெரிய வந்தது. 

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com