search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவளத்துறை அனுமதி பெற்று மீன் பிடிக்கச் செல்லவேண்டும் - துணை இயக்குநர் தகவல்
    X

    மீனவளத்துறை அனுமதி பெற்று மீன் பிடிக்கச் செல்லவேண்டும் - துணை இயக்குநர் தகவல்

    • மத்திய-மாநில அரசுகள் ரூ.245 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவித்தன.
    • கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கட்டுமான குளறுபடி யால் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதை யாக நடந்து வருகிறது.

    ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த விபத்துகள் அதிகமாக நடக்கும். இதனால் மீன் பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய-மாநில அரசுகள் ரூ.245 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறி வித்தன.

    இதற்கிடையில் தற்போ தைய தென் மேற்கு பருவக்கா ற்றின் தீவிர த்தால் மீண்டும் கடல் சீற்றம் அதிகமானதால் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் மணல் திட்டுகள் ஏற்பட்டது. இதனால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வள்ளங்கள் அந்த பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறைமுகம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 12-ந் தேதி ஆழ்கடலில் இருந்து சுமார் 40-க்கும் அதிகமான படகுகளில் மீன் பிடித்து வந்து அவற்றை இறக்க முடியாமல் தேங்கியதாக தெரிய வருகிறது.

    தேங்கி இருந்த மீன்கள் சம்மந்தபட்ட துறையின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் இறக்கி விற்கப்பட்டது.இந்நிலையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் திறந்து மீன் பிடிக்க வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினர்.

    தொடர்ந்து மீன்வளத் துறை துணை இயக்குனர் அனுப்பியுள்ள அறிக்கை யில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பரா மரிப்பு பணி முடியும் வரை படகுகளில் மீனவர்கள் அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தும் மீன்பிடிக்க சொல்லலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லக்கூடிய விசைப்படகுகள் மீன்வளத் துறை மூலம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேங்காபட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் நிகழ்வுகள் அதிக மாக நடந்தது.இந்த அறிவிப்பி னால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×