search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாரில் தொழில் போட்டியில் மோதல் ; அரிசி வியாபாரி திடீர் சாவு - போலீசார் விசாரணை
    X

    கோட்டாரில் தொழில் போட்டியில் மோதல் ; அரிசி வியாபாரி திடீர் சாவு - போலீசார் விசாரணை

    • தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    கோட்டாறு வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் திருமன்னார் (வயது 65). ஈத்தாமொழி செம்பொன் கரை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 63) .

    இவர்கள் இருவரும் கோட்டாறு பகுதியில் அரிசி கடை வைத்துள்ளனர். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று அருணாச்சலத்திற்கும், திருமன்னாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அரிவாளால் திருமன்னாரை முதுகு,தோள்பட்டை, கை பகுதியில் சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அருணாச்சலத்திற்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே அருணாச்சலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்னும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×