search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் மீது வழக்கு
    X

    மார்த்தாண்டம் அருகே செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் மீது வழக்கு

    • ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
    • தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜாண் (வயது 56) செங்கல் சூளை நடத்தி வருகிறார்.


    இவருக்கும் சிதறால் வருக்கவிளையை சேர்ந்த ரெஜி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்டோபர் ஜாண் வீட்டின் காம்பவு ண்டின் உள்பகுதியில் நின்றபோது ரெஜி (43), ஆல்பர்ட் ராஜ் (42), சத்யன் (40), வர்கீஸ் (40) ஆகியோர் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜாணை கம்பியால் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த கிறிஸ்டோபர் ஜாணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


    இது குறித்து மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரெஜி மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி உள்ளதாகவும், இதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாலும் சம்பவத்தன்று ரெஜி தந்தையின் கல்லறையின் அருகாமையில் நின்றபோது கிரிஸ்டோபர் ஜாண், ரெஜியை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இதனையடுத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×