search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    சாம்பவர்வடகரை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • மரம் ஏறும் பொழுது கீழே விழுந்ததில் சுந்தர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
    • மனமுடைந்த சுந்தர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 41). விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரமாக மது அருந்தி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×