search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் விஷம் குடித்து சாவு
    X

    முதியவர் விஷம் குடித்து சாவு

    • மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை சாந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது62). விவசாயி. இவரது மகன் சீனிவாசன்.

    இந்த நிலையில் கோவிந்தராஜூக்கு மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும், அவருக்கு எந்த பலனும் அளிக்காததால், மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மகன் சீனிவாசன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×