

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் போலீசார் புனுகாண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சபரி(வயது 35), அப்பு (38), மதி (31), சக்தி (37), கோவிந்தராஜ், புகழ், சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்களில் அப்பு,மதி,சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.