search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் திட்டியதால் மகள் விஷம் குடித்து சாவு
    X

    தாய் திட்டியதால் மகள் விஷம் குடித்து சாவு

    • மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார்.
    • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உலகானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரின் மகள் பவித்ரா (வயது18) இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவரது தாய் கோவிந்தம்மாள் வீட்டு வேலை செய்ய முடியாததால் பவித்ராவை உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் எந்த உதவியும் செய்யாததால் கோபத்தில் பவித்ராவை திட்டியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார். இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தம்பி ஹரி உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில் பவித்ராவை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×