என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாய் திட்டியதால் மகள் விஷம் குடித்து சாவு
- மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார்.
- சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உலகானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரின் மகள் பவித்ரா (வயது18) இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவரது தாய் கோவிந்தம்மாள் வீட்டு வேலை செய்ய முடியாததால் பவித்ராவை உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் எந்த உதவியும் செய்யாததால் கோபத்தில் பவித்ராவை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார். இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தம்பி ஹரி உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் பவித்ராவை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்