search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  டிராக்டர் மோதி வாலிபர் சாவு
    X

    தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் சாவு

    • தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார்.
    • எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆத்து மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜயன் (வயது 27), இவர் நேற்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார். பின்னர் மலைக்கோட்ட லத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது மலைக்கோட்டாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×