

மத்திய டெல்லி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி வணிக அனுமதி உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கெடு விதித்தனர்.
ஜனவரி 7-ம் தேதி காலக்கெடு முடிவடைந்த நிலையில், அனுமதி உரிமம் பெறாத கடைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள் என பலர் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.