சவுத்தாம்டன் டெஸ்ட் - 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. #INDvsENG
சவுத்தாம்டன் டெஸ்ட் - 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்
Published on

இங்கிலாந்து இந்தியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி புஜாராவின் அபார சதத்தால் 273 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. நேற்றய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் குக் 12 ரன்கள், மொயின் அலி 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் சற்று பொருமையுடன் விளையாடிய ஜென்னிங்ஸ் மற்றும் ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. 36 ரன்கள் எடுத்திருந்த ஜென்னிங்ஸ் முகமது ஷமி வீசிய பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெய்ர்ஸ்டோ முதல் பந்திலேயே ஷமியின் வேகத்தில் ஸ்டெம்புகள் தெரிக்க ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இவர்களை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 48 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது.

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 6-வது விக்கெட்டுக்கு பட்லருடன் ஜோடி சேர்ந்து வழக்கம் போல இந்திய பந்து வீச்சாளர்களின் விக்கெட் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டு சீரான வேகத்தில் ரன்களை குவித்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தின் தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் குவித்து இந்தியாவை விட 127 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பட்லர் 22 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com