இங்கிலாந்துக்கு மகிழ்ச்சியான செய்தி: நியூசிலாந்து அணியில் இருந்து பெர்குசன் விலகல்

17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அச்சுறுத்தலாக இருந்த பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளதால் இங்கிலாந்து சற்று ஆறுதல் அடைந்துள்ளது.
பெர்குசன்
பெர்குசன்
Published on

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இங்கிலாந்துக்கு உள்ளது. அந்த அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி தற்போது கிடைத்துள்ளது.

அந்த செய்தி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்பதுதான். மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வந்த  நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பெர்குசன் 7 போட்டிகளில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

தற்போது அவர் அணியில் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com