

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள ஹைடர்போரா பகுதி வழியாக இன்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒரு வீரர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் அதிகாரிகளும், வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #CRPFjawanInjured