கர்நாடக மாநிலத்தில் கார் மீது லாரி மோதல் - தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் கார் மீது லாரி மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #KarnatakaAccident
கர்நாடக மாநிலத்தில் கார் மீது லாரி மோதல் - தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
Published on

பெங்களூரு:

தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றுவிட்டு கர்நாடக மாநிலம் வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று காலை அவர்கள் சித்ரதுர்கா அருகே ஜவனஹள்ளி என்ற இடத்தில் வந்தபோது, அவர்களின் கார் மீது சரக்கு லாரி மோதியது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. காருக்குள் இருந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #KarnatakaAccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com