காங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு - 4 பேர் பலி

காங்கோ நாட்டில் 6 பேருக்கு மீண்டும் எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
எபோலா வைரஸ்
எபோலா வைரஸ்
Published on

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று பரவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் வங்காட்டா பிராந்தியத்தில் 6 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com