இலுப்பூர், பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
இலுப்பூர், பொன்னமராவதி பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

அன்னவாசல்:

இலுப்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கிடைத்த தகவலின் பேரில், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்கள், உணவு விடுதி, இறைச்சி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகளில் திடீர் ஆய்வு செய்த அலுவலர்கள் அங்கிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனூர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இதேபோல் பொன்னமராவதியில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவின்படி, பேரூராட்சி பணியாளர்கள் பஸ் நிலையம், சந்தை விதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com