

சேலம்:
சேலம் எடப்பாடியில் உள்ள தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #NanjundeshwaraTemple